செய்திகள் இந்தியா
தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
புதுடெல்லி:
ஏர் இந்தியாவின் ஏ350-900 ரக விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் தரையிறக்கப்பட்டது.
தில்லியிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியாவின் ஏ350-900 ரக விமானம், சுமார் ஏழு மணி நேரம் வானில் பறந்த பிறகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு தில்லிக்குத் திரும்பியது.
இந்த எதிர்பாராத சூழ்நிலையால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், பயணிகள் கூடிய விரைவில் லண்டனுக்கான தங்கள் பயணத்தைத் தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த விமான நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
முன்னதாக, மார்ச் 15 ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறை அதே ஏ350-900 ரக விமானம் சந்தித்துள்ளது. அதைத் தொடர்ந்து நியூயார்க்கில் இருந்து தில்லிக்கு இயக்கப்பட்ட அந்த விமானம், அயர்லாந்தின் ஷானன் நகருக்குத் திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 5:28 pm
குஜராத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றபட்டது
March 25, 2026, 6:20 pm
"எனது வாகனத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை": ரேபிடோ ஓட்டுநர் பணிநீக்கம்
March 25, 2026, 10:01 am
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
March 24, 2026, 5:16 pm
காசநோய் குழந்தைகளுக்கு 47,000 ரூபாய் திரட்டிய பணியாளர்கள்
March 24, 2026, 4:22 pm
"எக்ஸ்ட்ரா காசு தர்றோம்.. பார்சல் பண்ணுங்க": முதியவரை மூட்டையில் கட்டி கொண்டு வந்த 5 பேர்
March 24, 2026, 4:16 pm
ஈகைத் திருநாள் தொழுகைக்குத் தடை விதித்த அதிகாரி: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நின்ற இந்து மக்கள்
March 24, 2026, 2:43 pm
