நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்ப அலை மத்தியில் மாணவர்களின் உடல்நலத்தை உறுதிப்படுத்துமாறு அமைச்சகத்திற்கு மாமன்னர் உத்தரவு

பெட்டாலிங் ஜெயா: 

வெப்ப காலத்தில் மாணவர்களின் நலனை உறுதிப்படுத்துமாறு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கல்வி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

"ஜூன் மாதம் தொடக்கம் அல்லது நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வெப்பமான வானிலையால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த, இந்த விஷயத்தில் தீவிரமான கவனம் செலுத்துமாறு அமைச்சகத்திற்கு மன்னர் உத்தரவிட்டுள்ளார்" என்று இஸ்தானா நெகாரா அறிக்கை வெளியிட்டிருந்தது.

வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்து போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கும் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

வானிலையால் அதிக தீ விபத்துக்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகளுக்கு தயாராக இருக்குமாறும் அவர் தீயணைப்பு, மீட்பு துறையை வலியுறுத்தினார்.

"அதே நேரத்தில், வெப்பமான வானிலை, வலுவான காற்று தீயை விரைவாக பரவச் செய்யும் என்பதால், வெளிப்புற தீ மூட்டுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மன்னர் அறிவுறுத்துகிறார்.

"மருத்துவ சிக்கல்களைத் தடுக்க முதியோர்கள், குழந்தைகள் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அரண்மனை தெரிவித்தது.

கெடா, பெர்லிஸ், பினாங்கு, பேராக், பாஹாங் உட்பட பல மாநிலங்கள் அதிக வெப்பநிலையைச் சந்தித்து வருகின்றன, சில பகுதிகளில் குறைந்தது மூன்று தொடர்ச்சியான நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸாக இருக்கிறது.

தற்போதைய வெப்ப காலம் ஜூன் வரை நீடிக்கும் என்று வானிலை துறை தெரிவித்தது, மார்ச் நடுப்பகுதி முதல் ஏப்ரல் நடுப்பகுதிக்கிடையே வெப்பநிலை உச்சத்தைத் தொடும் என்று கணிக்கப்படுகிறது.

வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க வெளிப்புற நடவடிக்கைகளைக் கவனமாக திட்டமிடுமாறு சுகாதார அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset