நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

9.5 மில்லியன் ரிங்கிட் சேவைக் கட்டணம் மட்டுமே; வழக்கிற்கான தீர்வு அல்ல: விக்டர் சின்

கோலாலம்பூர்:

கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 9.5 மில்லியன் ரிங்கிட் அமலாக்க இலாக்களுடனான எந்தவொரு வழக்கையும் தீர்த்து வைக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டதல்ல.

மாறாக, அது ஒரு சேவைக் கட்டணம் மட்டுமே  என்று தொழிலதிபர் விக்டர் சின் தெளிவுபடுத்தியுள்ளார்.

பல மில்லியன் ரிங்கிட் பணம் தனக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகளை மூடிமறைப்பதற்காக செலுத்தப்படவில்லை.

மாறாக பெருநிறுவன மாபியா உறுப்பினர்களின் கடுமையான அழுத்தத்தின் காரணமாகவே அது செலுத்தப்பட்டது.

இந்தப் பணம் எந்தவொரு அமலாக்க நிறுவனத்திற்கும் உதவி செய்வதற்காகவோ, எந்தவொரு விசாரணையையும் மூடிமறைப்பதற்காகவோ அல்லது எனக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்காகவோ செலுத்தப்படவில்லை.

என்னுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் நபர்கள் மீதான விரோதப் போக்கைத் தடுப்பதற்காக, தீவிரமான சூழ்நிலைகளில் விதிக்கப்பட்ட ஒரு சேவைக் கட்டணம் தான் அது என்று அவர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset