செய்திகள் இந்தியா
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
ஹரித்வார்:
மாட்டை பலி கொடுக்க கொண்டு சென்றதாக சந்தேகித்து, ஒரு இளைஞரை சிலர் வலுக்கட்டாயமாக காரில் இழுத்துச் சென்று தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சதாம் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், மார்ச் 19ஆம் தேதி இரவில் இரண்டு மாடுகள், ஒரு கன்றைக் கொண்டு சென்றபோது, காளி கோவில் அருகே சிலர் அவரது வாகனத்தைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதன்பின், மாடுகளை பலி கொடுக்க கொண்டு செல்கிறார் என குற்றம் சாட்டிய குழுவினர், அவரை காரில் ஏற்றி கடுமையாக தாக்கியதுடன், மீண்டும் மாடுகளை கொண்டு சென்றால் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூ வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் உண்மை நிலையை உறுதிப்படுத்த போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
