செய்திகள் இந்தியா
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
ஹரித்வார்:
மாட்டை பலி கொடுக்க கொண்டு சென்றதாக சந்தேகித்து, ஒரு இளைஞரை சிலர் வலுக்கட்டாயமாக காரில் இழுத்துச் சென்று தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சதாம் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், மார்ச் 19ஆம் தேதி இரவில் இரண்டு மாடுகள், ஒரு கன்றைக் கொண்டு சென்றபோது, காளி கோவில் அருகே சிலர் அவரது வாகனத்தைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதன்பின், மாடுகளை பலி கொடுக்க கொண்டு செல்கிறார் என குற்றம் சாட்டிய குழுவினர், அவரை காரில் ஏற்றி கடுமையாக தாக்கியதுடன், மீண்டும் மாடுகளை கொண்டு சென்றால் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூ வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் உண்மை நிலையை உறுதிப்படுத்த போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 5:16 pm
காசநோய் குழந்தைகளுக்கு 47,000 ரூபாய் திரட்டிய பணியாளர்கள்
March 24, 2026, 4:22 pm
"எக்ஸ்ட்ரா காசு தர்றோம்.. பார்சல் பண்ணுங்க": முதியவரை மூட்டையில் கட்டி கொண்டு வந்த 5 பேர்
March 24, 2026, 4:16 pm
ஈகைத் திருநாள் தொழுகைக்குத் தடை விதித்த அதிகாரி: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நின்ற இந்து மக்கள்
March 24, 2026, 2:43 pm
வெற்று மிரட்டலா அல்லது சதியா?: டெல்லி பள்ளிகள், சட்டசபைக்குத் தொடரும் மர்ம மின்னஞ்சல்கள்
March 23, 2026, 5:16 pm
ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தை வெல்லும் வீர மங்கையர்கள்
March 20, 2026, 8:29 pm
வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி
March 20, 2026, 10:12 am
மேற்காசிய போர் சூழல் குறித்து மலேசிய பிரதமருடன் மோடி உரையாடல்
March 19, 2026, 10:18 pm
