நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி

மும்பை: 

வளைகுடாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை காரணமாக வரலாறு காணாத அளவாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.93.40 ஆக சரிந்தது.

முந்தைய வணிகத்தின் முடிவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.92.87 ஆக இருந்த நிலையில் இன்று அது ரூ.93.40 ஆக உயர்ந்து வணிகமாகி வருகிறது. இது முன் எப்போதும் இல்லாத சரிவாகும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28ஆம் தேதி தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இவ்விரு நாடுகளுக்கும் எதிராக ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. 

இஸ்ரேலின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதல் உட்பட அந்நாட்டுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் ஈரான், அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதோடு, வளைகுடா நாடுகளின் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், உள்ளே உள்ள கப்பல்கள் வெளியே செல்ல முடியாமலும், வெளியே உள்ள கப்பல்கள் உள்ளே செல்ல முடியாமலும் உள்ளன. இது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பரவாலாக்கத்துக்கு வழி வகுத்துள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 94.5 டாலராக உள்ளது. உயர்ந்த தரம் கொண்ட பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 107.65 டாலராக உள்ளது. டாலர் மூலமாகவே எண்ணெய் வர்த்தகம் நடைபெறுவதால் டாலருக்கான மதிப்பும் உயர்ந்து வருகிறது.

டாலர் மதிப்பு உயர்வதால், இந்திய பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை விற்றுவிட்டு டாலரை நோக்கி நகருகிறார்கள். இதனால், இந்திய பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. டாலரின் மதிப்பு உயர்வதால் ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது.

வட்டி வகிதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பு ஏறக்குறைய இல்லை என்பதாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் எடுத்துள்ள நிலைப்பாடு காரணமாக, டாலர் வலுவாகவே இருந்து வருகிறது. இது முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset