நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மேற்காசிய போர் சூழல் குறித்து மலேசிய பிரதமருடன் மோடி உரையாடல்

புதுடில்லி:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது அவர்களிடம் மேற்காசிய போர் சூழல் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார்.

மேலும், அந்த பிராந்தியத்தில் நிலவும் மோதலை தணிப்பதற்கும், தொடர்ந்து அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இந்தியா ஆதரவளிப்பதாக மோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகளில் இந்திய பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,

மலேசியாவின் பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நடத்திய உரையாடலில், மேற்காசியாவின் கவலைக்குரிய சூழல் குறித்தும், பேச்சுவார்த்தை மூலம் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டு கொண்டு வருவதில் எங்களுக்கு இருக்கும் உறுதிப்பாடு குறித்தும் விவாதித்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset