செய்திகள் இந்தியா
விமானங்களில் 60 சதவீத இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை
மும்பை:
விமானங்களில் 60 சதவீத இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
உலகளவில் உள்நாட்டு விமானப் பயணிகளை கையாளுவதில் இந்தியா மூன்றாவது நாடாக இருக்கின்றது. இந்திய விமான நிலையங்கள் நாளொன்றுக்கு 5 லட்சம் பயணிகளை கையாண்டு வருகின்றன.
விமானங்களில் பயணம் செய்ய ஜன்னல் இருக்கைகள், முன்பக்க இருக்கைகள் போன்றவற்றை தேர்வு செய்வதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
இந்த நிலையில், அனைத்து விமானங்களிலும் 60 சதவீத இருக்கைகளை தேர்வு செய்வதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒன்றாக பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒன்றாக இருக்கைகளை ஒதுக்கீடு செய்யவும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “விளையாட்டு உபகரணங்கள், இசைக் கருவிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு செயல்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு உகந்த வசதிகளை செய்து தரவேண்டும். செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கான வெளிப்படையான கொள்கைகளை நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.
விமான நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் செயலிகள், முன்பதிவுத் தளங்கள், விமான நிலைய கவுண்டர்கள் முழுவதும் பயணிகளின் உரிமைகளை உள்ளூர் மொழிகளில் தெளிவாகக் காட்சிப்படுத்துதல் வேண்டும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 4:48 pm
டாக்டர் வந்தனா கொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட்டது
March 18, 2026, 3:05 pm
பில்லி சூனியம் அதிர்ச்சி சம்பவம்: மூடநம்பிக்கைக்குப் பலியான 3 உயிர்கள்
March 18, 2026, 2:43 pm
சிலிண்டர்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்திய அரசு எச்சரிக்கை
March 16, 2026, 1:02 pm
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: குறைந்தது 10 நோயாளிகள் உயிரிழப்பு
March 16, 2026, 12:09 pm
தூதரகப் பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி: ஈரானைக் கடந்து தாயகம் திரும்பும் இந்தியக் கப்பல்கள்
March 15, 2026, 4:47 pm
ஆந்திராவில் துயர சம்பவம்: மோட்டார் சைக்கிளின் புகையினால் நால்வர் பலி
March 14, 2026, 3:45 pm
வட்டார அமைதி, ராஜதந்திர அவசியம் குறித்து இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் பேச்சு
March 13, 2026, 5:31 pm
