நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாருக்கு எதிரான வேத மூர்த்தியின் வழக்கு தள்ளுபடி: வழக்கு செலவாக 80,000 ரிங்கிட் தொகையை வேத மூர்த்தி செலுத்த நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர்: 

தம்பூன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் அன்வார் இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டதை சவால் செய்த, முன்னாள் அமைச்சர் பி. வேத மூர்த்தியின் தாக்கல் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி அலிஸ் லோக் யீ சிங், இந்த வழக்கு தேர்தல் மனுவாக தாக்கல் செய்யப்பட வேண்டியது எனக் கூறி, நீதிமன்றத்திற்கு இதை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, அன்வாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், வழக்கு தொடர்பான செலவாக 80,000 ரிங்கிட் தொகையை வேத மூர்த்தி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset