நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மழலையர் காப்பகத்தில் 4 மாதக் குழந்தை மரணம்; மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம்: போலிஸ்

செபராங் ஜெயா:

செபராங் ஜெயா மருத்துவமனைப் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மழலையர் காப்பகத்தில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட நான்கு மாதக் குழந்தை, மூச்சுத்திணறலால் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மருத்துவர் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையின் மூலம், குழந்தையின் மரணத்திற்குக் காரணம் மூச்சுத்திணறல் எனத் தீர்மானிக்கப்பட்டதாக மாநில போலிஸ் தலைவர் டத்தோ அஜிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

மூச்சுத்திணறல் என்பது ஒரு அவசர மருத்துவ நிலையாகும்.

இதில், சுவாசக் கோளாறு காரணமாக உடலுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மூச்சுத்திணறல், சுயநினைவு இழப்பு, மூளை பாதிப்பு அல்லது மரணம் ஏற்படலாம்.

இந்த வழக்கிற்கான விசாரணை ஆவணங்கள் இன்னும் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளதாக டத்தோ அஜிஸி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset