செய்திகள் மலேசியா
இரண்டு வாகனங்கள் மோதியதில் பெண் குழந்தை உயிரிழந்தது
தானா மேரா:
மகா மச்சாங் – தானா மேரா சாலையில் உள்ள பண்டார் பாரு தானா பகுதியில், இரண்டு வாகனங்கள் மோதியதில் ஒரு பெண் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தச் சம்பவம் இன்று காலை 4.20 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்ததுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டனர்.
தானா மேரா தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் இயக்குனர் ஹம்தான் அப்துல்லா, காலை 4.35 மணியளவில் தமது தரப்புக்குச் சம்பவம் பற்றிய அழைப்பு வந்ததாகக் கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஏழு தீயணைப்பு வீரர்களும் அதிகாரிகளும் 'Perodua Myvi', 'BMW 5 Series' வகை கார்களுக்கிடையில் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.
"இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை அனைவரையும் வாகனங்களில் இருந்து வெளியேற்றினோம். ஒரு பெண், ஒரு பெண் குழந்தை உயிரிழந்தனர்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
காயமடைந்தவர்கள் சுகாதாரத் துறையிடம் (KKM) ஒப்படைக்கப்பட்டதுடன் உயிரிழந்தோர் மேலதிக விசாரணைக்காக போலிசாரிடம் கொடுக்கப்பட்டனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 3:11 pm
சாலைகளை ‘குப்பைத்தொட்டி’ ஆக்க வேண்டாம்: கோர் மிங் எச்சரிக்கை
March 18, 2026, 3:10 pm
நாட்டின் மிகப்பெரிய இணையம் வழி உயர் கல்வி நிகழ்வு
March 18, 2026, 3:09 pm
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச வீடமைப்பு திட்டம்: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
March 18, 2026, 3:08 pm
தனிமையில் சிக்கிய நபர் மீதான விசாரணை பாலியல் பலாத்கார வழக்காக மாறியது
March 18, 2026, 3:07 pm
நிச்சயதார்த்தப் பெண்ணைத் தாக்கிய ஆடவருக்கு RM1,500 ரிங்கிட் அபராதம்
March 18, 2026, 2:05 pm
மழலையர் காப்பகத்தில் 4 மாதக் குழந்தை மரணம்; மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம்: போலிஸ்
March 18, 2026, 2:05 pm
தோமி தோமஸுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கை மீண்டும் தொடர நஜிப் மனு தாக்கல்
March 18, 2026, 2:03 pm
