நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலானில் மாற்று நடைமுறை: உணவுக்கு பதில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய அர்-ரஹ்மான் பள்ளிவாசல்

ஷா ஆலம்: 

கெடா மாநிலத்தின் கெர்பான் பகுதியில் உள்ள அர்-ரஹ்மான் பள்ளிவாசலில், ரமலான் மாதத்தில் வழக்கமான உணவு வழங்குதலுக்கு பதிலாக சமையல் பொருட்கள் ‘மோரே’யாக வழங்கப்படும் புதிய நடைமுறை சமூகத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

பள்ளிவாசல் செயலாளர் சப்ரி சியாஃபி தெரிவித்ததாவது, தராவீஹ் தொழுகைக்குப் பிறகு இரவு நேரம் தாமதமாக இருப்பதால் உணவு வீணாகும் நிலை ஏற்பட்டது. 

இதனால், சர்க்கரை, சோயா சாஸ், பால் உள்ளிட்ட அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கும் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறினார்.

இந்த பொருட்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியவை என்பதால், மக்களுக்கு அதிக பயன் அளிப்பதாகவும் அவர் விளக்கினார். இந்த நடைமுறை 2000-ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்தே சமூகத் தேவைக்கு ஏற்ப அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தனித்துவமான ‘மோரே’ வழங்கல் தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset