நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“நாட்டிற்காக சமாதானம் முக்கியம்”: ஜாமினில் வெளியான ஜம்ரி வினோத்

கோலாலம்பூர்: 

பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஜம்ரி வினோதுக்கு, RM4,500 ஜாமீன் வழங்கப்பட்டது.

முன்னதாக, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஜம்ரிக்கு அவரது சக மத போதகரான ஃபிர் தாவுஸ் வோங்கால் ஜாமீன் வழங்க அனுமதி அளித்ததாகத் தெரியவருகிறது.

 செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நாட்டின் நலனுக்காக எல்லோரும் சமாதானமாக நடப்பது அவசியம் என்றும், எழும் பிரச்சனைகள் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஜம்ரி கூறினார்.

"எந்த விஷயமும், சமாதானத்திற்கு முன்னேற முடிந்தால், அது மலேசியாவின் நலனுக்காக மிகவும் சிறந்தது," என அவர் வலியுறுத்தினார்.

அவர், மலேசிய மக்கள் அனைவருக்கும் அய்டில்ஃபித்ரி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

முன்னதாக, பெயர் முஹம்மது ஜம்ரி வினோத் காளிமுத்து, 42, கடந்த மாதம் தனது முகநூலில் பொது மக்களிடையே பயம் உண்டாக்கக்கூடிய கருத்துகளை தாம் வெளியிட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

Penyelaras Himpunan Gerakan Anti Rumah Anutan Haram (GARAH) என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஜம்ரி, குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்யுமாறு கோரினார்.

குற்றம் சாட்டப்பட்டால் குற்றவியல் சட்டம் 505(b) பிரிவின் கீழ் இரண்டாண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நீதிமன்றம் பின்னர் ஜம்ரியை RM4,500 ஜாமினில் விடுதலை செய்து, வழக்கை ஏப்ரல் 29ஆம் தேதி விசாரணைக்காக நிர்ணயித்தது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset