செய்திகள் மலேசியா
அருண் துரைசாமிக்கு ஆதரவளிக்க குலசேகரன் நீதிமன்றம் வந்தாரா? துணை அமைச்சரின் நீதிமன்ற வருகை பேசுபொருளானது: பொது பார்வை குறித்து PKR கவலை
கோலாலம்பூர்:
பிரதமர் துறையின் துணை அமைச்சரான எம். குலசேகரன், அருண் துரைசாமியின் வழக்கு விசாரணை நடைபெறும் நேரத்தில் நீதிமன்ற அறையில் தாம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
பினாங்கில் இருந்து திரும்பியபோது, ஜாவி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற வளாகத்தின் வெளியே அருணைச் சந்தித்து, அவருக்கு ஊக்கமளித்து சட்ட நடைமுறையில் நம்பிக்கை வைக்குமாறு அறிவுறுத்தியதாக குலசேகரன் தெரிவித்தார்.
மேலும், இந்திரா காந்தியின் குழந்தைகள் தொடர்பான முந்தைய வழக்கில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய காலத்திலிருந்தே அருணை அறிந்திருப்பதாகவும் கூறினார்.
மேலும், குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோதும், விசாரணை நடைபெற்றபோதும் தாம் நீதிமன்ற அறைக்குள் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு முன்பு, PKR கட்சியின் மத ஒற்றுமை, வலுவூட்டல் பிரிவு, அருணுடன் நீதிமன்றத்தில் குலசேகரன் இருந்தது குறித்து விளக்கம் கோரியது.
அந்த பிரிவின் தலைவர் அமிடி அப்துல் மனான், துணை அமைச்சரின் வருகை, அது தனிப்பட்ட வகையிலானதாக இருந்தாலும் பலவிதமான கருத்துக்களை உருவாக்கக்கூடும் என்றும், அது அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள பார்வையைப் பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 5:18 pm
கடன் சுமை இல்லா ஹரி ராயா: 4,000 பேருக்கு விரைவு திவால் நிவாரணம்
March 17, 2026, 5:16 pm
சுற்றுலா துறையில் மலேசியா முன்னேற்றம்: VM2026க்காக ஒருங்கிணைந்த முயற்சி
March 17, 2026, 5:10 pm
மாற்றுத்திறனாளி பெண் ஊழியரைத் தாக்கிய சமூக ஊடகப் பிரபலத்துக்கு RM2000 ரிங்கிட் அபராதம்
March 17, 2026, 5:08 pm
கோத்தா பாரு - கோம்பாக் இடையிலான இரயில் பாதை பணிகள் முன்கூட்டியே நிறைவு
March 17, 2026, 5:07 pm
டீசல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி: சபா, சரவாக்கில் மானிய முறையை மாற்றியமைக்க மலேசிய அரசு தீவிரம்
March 17, 2026, 5:05 pm
“மலேசிய உள்நாட்டுச் சுற்றுலாவில் அதிரடி வளர்ச்சி”: புள்ளிவிவரத் துறை அதிகாரி உசிர் மஹிதின்
March 17, 2026, 5:02 pm
