நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பகாங், ஜொகூர், சரவாக் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று மாலை 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகாங் மாநிலத்தில் மாரான், குவாந்தான், பெரா, பெக்கான், ரொம்பின் ஆகிய இடங்களிலும், ஜொகூர் மாநிலத்தில் செகாமாட், பத்து பஹாட், குளுவாங், பொந்தியான், பூலாய் ஆகிய பகுதிகளிலும் இந்த வானிலை மாற்றம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், சரவாக் மாநிலத்தில் ஸ்ரீ அமான், சிபு , முக்கா, பிந்துலு ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், வானிலை மாற்றங்களைக் கவனித்துச் செயல்படுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset