செய்திகள் மலேசியா
சிலாங்கூர் சுங்கத்துறையின் அதிரடி சோதனை: 15 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பட்டாசு, புகையிலை பறிமுதல்
கிள்ளான்:
கடந்த மாதம் சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மலேசிய ராயல் சுங்கத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுங்கத்துறை இயக்குனர் முஹம்மத் அசார் அஹமத் பஹாராசி இது குறித்து கூறுகையில், புஞ்சாக் ஆலம் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 2 லட்சத்து 66 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பட்டாசுகள் பிடிபட்டதாகத் தெரிவித்தார்.
அதேபோல், கிள்ளான் மேற்குத் துறைமுகத்தில் 'பார்ட்டி அலங்காரப் பொருட்கள்' என்று பொய்யாகத் தகவல் அளித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முயன்ற சுமார் 13 டன் எடையுள்ள பட்டாசுகளையும் அதிகாரிகள் மீட்டனர்.
மேலும், முறையான இறக்குமதி அனுமதி இன்றி 'எனர்ஜி டிரிங்க்' எனப் பொய் கூறி கடத்த முயன்ற 2,880 கிலோ ஷிஷா புகையிலை, வடக்குத் துறைமுகத்தில் சிக்கிய 3,900 கிலோ புகையிலை ஆகியவற்றையும் சுங்கத்துறை பறிமுதல் செய்தது.
முறையான உரிமம் இன்றி பட்டாசு, புகையிலைப் பொருட்களை இறக்குமதி செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 1967-ஆம் ஆண்டு சுங்க வரிச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
சரவாக்கில் பரபரப்பு: காட்டில் சிக்கிய 22 வயது இளைஞர் 6 நாட்களுக்குப் பின் மீட்பு
March 12, 2026, 4:53 pm
15 வயது மாணவியிடம் அத்துமீறல்: குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
March 12, 2026, 4:51 pm
4 மாத குழந்தை மரண வழக்கு: பயிற்சி இல்லாமல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்
March 12, 2026, 4:01 pm
