செய்திகள் மலேசியா
சட்டவிரோத பழைய இரும்பு, மின்னணு கழிவுகள் இறக்குமதி பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கும் பிரதமரின் உறுதிப்பாடு பாராட்டுக்குரியது: டத்தோ ஜோ சரவணன்
கோலாலம்பூர்:
நாட்டின் மறுசுழற்சி துறை எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்கள் குறித்து விவாதிக்கத் தொழில் துறை பிரதிநிதிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி.
மலேசிய மறுசுழற்சி துறையினர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜோ சரவணன் இதனை கூறினார்.
இந்தச் சந்திப்பு தொழில் துறையினருக்கு முக்கியமான பல பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.
குறிப்பாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் மறுசுழற்சி பொருட்கள், மின்னணு கழிவுகள் தொடர்பான பிரச்சினைகள், சட்டப்படி செயல்படும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை பாதித்து வருகிறது.
இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே சட்டப்படி வணிகம் செய்து வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் இப்பொருட்களை கையாள அரசாங்கம் உறுதி எடுத்திருப்பதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
இது விதிமுறைகளை பின்பற்றி செயல்படும் தொழில் துறை நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும்.என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்சினையை அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது, பொறுப்புடன் வணிகம் நடத்தும் நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு, மலேசியாவின் மறுசுழற்சி துறை நிலையான முறையில் வளர உதவும் என்றும் அவர் கூறினார்.
அதுடன், தொழில் துறையினரின் கருத்துகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகக் கேட்க முனைந்திருப்பது, மறுசுழற்சி துறை வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நிர்வகிக்கப்படும் என்ற நம்பிக்கையை துறையில் செயல்படும் அனைவருக்கும் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
சரவாக்கில் பரபரப்பு: காட்டில் சிக்கிய 22 வயது இளைஞர் 6 நாட்களுக்குப் பின் மீட்பு
March 12, 2026, 4:53 pm
15 வயது மாணவியிடம் அத்துமீறல்: குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
March 12, 2026, 4:51 pm
4 மாத குழந்தை மரண வழக்கு: பயிற்சி இல்லாமல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்
March 12, 2026, 4:01 pm
