நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது

வாஷிங்டன்:

பூமியின் கதிர்வீச்சு மண்டலங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் 'வான் ஆலன் புரோப் ஏ' (Van Allen Probe A) விண்கலம், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. 

600 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம், மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை காலை 8:45 மணி அளவில் வளிமண்டலத்திற்குள் நுழையும் என்று அமெரிக்க விண்வெளிப் படை கணித்துள்ளது.

சூரியனின் செயல்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட வளிமண்டல ஈர்ப்பு விசை, இந்த விண்கலத்தின் வருகையைத் திட்டமிட்டதை விட 10 ஆண்டுகள் விரைவுபடுத்தியுள்ளது.

வளிமண்டலத்தில் பயணிக்கும்போது இந்த விண்கலத்தின் பெரும்பாலான பாகங்கள் உராய்வினால் எரிந்து அழிந்துவிடும் என்றும், ஒருவேளை எஞ்சிய பாகங்கள் விழுந்தாலும் அவை கடலில் விழவே அதிக வாய்ப்புள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதனால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் ஏழு ஆண்டுகள் விண்வெளியில் செயல்பட்ட இந்த விண்கலம், பூமியைச் சுற்றியுள்ள கதிர்வீச்சு வளையங்கள் குறித்த அரிய தரவுகளை வழங்கியதுடன், தற்காலிகமான மூன்றாவது கதிர்வீச்சு மண்டலம் இருப்பதையும் கண்டறிந்து சாதனை படைத்தது. 

இதன் இரட்டை விண்கலமான 'புரோப் பி' (Probe B), வரும் 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகே பூமிக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset