நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு

நியூயார்க்: 

கூகுள் நிறுவனம், அதன் ஜெமினை ஏஐயைப் பயன்படுத்த மெட்டாவுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்காக கூடுதல் கணினி ஆற்றலுடைய உள்கட்டமைப்புத் திறன் தேவை எனக் கூறியது.

ஆனால் கூகுள் நிறுவனத்தால் இதனை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தனது ‘ஜெமினை ஏஐ’மாதிரிகளை மெட்டா நிறுவனம் பயன்படுத்துவதற்குக் கூகுள் கட்டுப்பாடுகளை விதித்தது.

கூகுள் உரிமையாளரான ஆல்பாபெட், கடந்த மார்ச் மாதம் மெட்டாவிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தது.

மெட்டா விலைக்கு வாங்க விரும்பிய முழுமையான ‘ஜெமினை ஏஐ’ கணினித் திறனைத் தங்களால் வழங்க முடியாது என்று கூகுள் கூறியதாக அந்த நாளேடு கூறியது.

இந்தத் தட்டுப்பாடு காரணமாக மெட்டாவின் சில ஏஐ திட்டங்கள் பாதிக்கப்பட்டு தாமதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மற்ற சில வாடிக்கையாளர்களும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், கூகுளின் ஏஐ மாதிரிகளுக்கு மெட்டாவிடம் இருந்து மிக அதிக அளவிலான தேவை இருந்ததால், அந்நிறுவனமே இதனால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset