நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சண்டாகானில் துயரம்: மண் சரிவில் சிக்கிய 76 வயது முதியவர் உயிரிழப்பு

சண்டாகான்: 

நகர மையத்தில் உள்ள ஒரு விடுதியின் பின்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 76 வயதுடைய முதியவர் உயிரிழந்தார்.

அகஸ்டின் பிரடெரிக் ஜே. லிங்கம் என அடையாளம் காணப்பட்ட அவர், அந்த விடுதியின் பணியாளராக இருந்தார். அதிக மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி இயந்திரத்தை இயக்க முயன்றபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டு அவர் மண்ணில் புதையுண்டார்.

சம்பவம் குறித்து காலை 6.39 மணியளவில் தகவல் கிடைத்ததாக சண்டாகான் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் ஜிம்மி லாகுங் தெரிவித்தார். உடனடியாக 10 பேர் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது.

தீயணைப்புத் துறையினர் காலை 7.14 மணியளவில் அவரை மீட்டெடுத்தனர். ஆனால் மருத்துவக் குழு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியது.
பின்னர் உடல் காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன், மீட்பு நடவடிக்கை காலை 8.19 மணியளவில் நிறைவடைந்தது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset