செய்திகள் மலேசியா
ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு மாரா கல்வி நிலையங்களுக்கு கூடுதல் விடுமுறை: டத்தோ அசிரஃப் வாஜ்டி அறிவிப்பு
கோலாலம்பூர்:
ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு மக்கள் நல அறக்கட்டளையின் கீழ் செயல்படும் 345 கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாக அதன் தலைவர் டத்தோ அசிரஃப் வாஜ்டி துசுகி அறிவித்துள்ளார்.
இந்த முடிவு மாரா தலைமை இயக்குநர் டத்தோ சுல்பிக்ரி ஒஸ்மானுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக அவர் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்தார். இதுகுறித்து மாரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன், கல்வி அமைச்சும் ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்த கூடுதல் விடுமுறை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பண்டிகை தயாரிப்புகளை ஒழுங்காக மேற்கொள்ள உதவும் வகையில் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 1:36 pm
பூர்வக்குடி மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
March 11, 2026, 1:35 pm
ஒரு தரப்பினரை மட்டும் தண்டிக்காதீர்கள்: அக்மால்
March 11, 2026, 1:34 pm
திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: நடேசன்
March 11, 2026, 1:03 pm
காதலியைத் தாக்கிய லாரி ஓட்டுநர்
March 11, 2026, 1:02 pm
இனம், மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுரை
March 11, 2026, 12:59 pm
“செக்கு சந்திரா மீதான தாக்குதலில் துப்புகள் கிடைத்துள்ளது”: டத்தோ ஷாசெலி கஹாரின் விளக்கம்
March 11, 2026, 12:58 pm
மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாய் நீதிமன்றத்தில் ஆஜர்
March 11, 2026, 12:57 pm
