நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கார் பக்கக் கண்ணாடியை சேதப்படுத்திய நபரைப் போலிஸ் தேடி வருகிறது

கோலாலம்பூர்: 

செராஸில் ஒரு கார் பக்கக் கண்ணாடியைச் சேதப்படுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பாக ஆடவர் ஒருவரைப் போலிஸ் தேடி வருகிறது.

நேற்று இரவு 8.40 மணியளவில் ஒருவர் ஒரு காரின் பக்கக் கண்ணாடியை உடைத்த வீடியோ டிக் டாக்கில் வைரலானது குறித்து போலிசில் புகார் பெறப்பட்டது என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முஹம்மத் ரோஸ்டி டாவுத் தெரிவித்தார்.

இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் பிரிவு 427, குற்றச் சட்டத்தின் பிரிவு 506, 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

“சந்தேக நபரையும் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளரையும் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் விசாரணைக்கு உதவ மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடமிருந்து உதவி பெறப்படும்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இதற்கு முன்பு, ஹோண்டா எச்.ஆர்.வி கார் ஓட்டி வந்த ஒருவர் காரில் இருந்து இறங்கி மற்றொரு காரின் பக்கக் கண்ணாடியை சேதப்படுத்தும் காட்சி கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. பின்னர் அவர் அங்கிருந்து விலகிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset