நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்தை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்கள் 

சூரத்:

குஜ​ராத் மாநிலம் சூரத் நகரில், பூஜைப் பொருட்​களு​டன் தவறு​தலாகக் கால்​வா​யில் வீசப்​பட்ட ரூ.2 லட்​சம் ரொக்​கப் பணத்தை தீயணைப்பு வீரர்​கள் துரித​மாகச் செயல்​பட்டு மீட்டு கொடுத்த சம்​பவம் சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது.

சூரத் நகரைச் சேர்ந்த ஒரு குடும்​பத்​தினர் அண்​மை​யில் தங்​கள் இல்​லத்​தில் சிறப்​புப் பூஜை நடத்​தினர். பூஜை முடிந்​தவுடன், வழி​பாட்​டிற்​குப் பயன்​படுத்​தப்​பட்ட மலர்​கள், இதரப் பொருட்களை ஒரு பையில் சேகரித்து பீரோ​வில் வைத்​திருந்​தனர். அதே பீரோ​வில் நான்கு கட்​டு​களாக வைக்​கப்​பட்​டிருந்த ரூ.2 லட்சம் ரொக்​கப் பணப் பையும் கவனக்​குறை​வாக அந்​தப் பூஜைப் பொருட்​களு​டன் கலந்​துள்​ளது.

இதனை அறி​யாத குடும்​பத்​தினர், பூஜைப் பொருட்​களை நீர்நிலையில் கரைப்​ப​தற்​காக அரு​கில் உள்ள கால்​வாய்க்கு எடுத்துச் சென்று வீசினர். வீட்​டிற்கு வந்து பார்த்​த​போது ​தான் பூஜைப் பொருட்​களு​டன் சேர்ந்து பணப் பையும் மாய​மானது தெரிய​வந்​தது. அதிர்ச்​சி​யடைந்த அவர்​கள், உடனடி​யாகத் தீயணைப்​புத் துறை​யினருக்​குத் தகவல் அளித்​தனர்.

சம்பவ இடத்​திற்கு வந்த வீரர்​கள், கால்​வா​யில் இறங்​கித் தேடு​தல் வேட்டை நடத்​தி, பணப்​பையை மீட்டு குடும்​பத்​தினரிடம் ஒப்படைத்​தனர்.  

இக்​கட்​டான சூழலிலும் நேர்​மை​யுடன் செயல்​பட்ட தீயணைப்பு வீரர்​களுக்​குப் பாராட்​டு​கள் குவிந்து வரு​கின்​றன. இந்த சம்​பவம் தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் அதி​க​மாக பகிரப்பட்​டு வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset