செய்திகள் இந்தியா
இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை: அரசிடம் விளக்கம் கோரிய எதிர்க்கட்சிகள்
டெல்லி:
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலால், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரில் பற்றாக்குறை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.
பல உணவக அமைப்புகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், வீட்டு சமையல் எரிவாயு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அவசியப் பொருட்கள் சட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ், சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோல் இரசாயன நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், முக்கிய எரிபொருள் மூலங்களை எரிவாயு உற்பத்திக்குத் திருப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சில துறைகளுக்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு விநியோகம் முன்னுரிமை அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களின் சராசரி பயன்பாட்டின் முழு அளவிலும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நகரங்களில் புதிய சிலிண்டர் பதிவு செய்ய 25 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையும், எரிவாயு பற்றாக்குறை குறித்த தகவல்களும் அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க காரணமாகியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 5:52 pm
ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்போருக்குப் புதிய விதிமுறைகள்: ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்
April 30, 2026, 5:33 pm
விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடூரம்: கணவர் கழிவறைக்குச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்
April 30, 2026, 10:54 am
பெங்களூருவில் சோகம்: மருத்துவமனைச் சுவர் சரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாகப் பலி
April 29, 2026, 5:46 pm
இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயில்: 47.6 டிகிரி செல்சியஸைத் தொட்ட வெப்பம்
April 29, 2026, 12:45 pm
வங்கிப் பணத்திற்காகத் தம்பியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்த அண்ணன்: ஒடிசாவில் நிகழ்ந்த சோகம்
April 29, 2026, 12:30 pm
எரிபொருள் வரி விலக்கு இல்லாமல் இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடு முடங்கும் நிலையில் உள்ளது
April 28, 2026, 4:05 pm
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
April 28, 2026, 3:48 pm
