நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நள்ளிரவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

சுங்கை பெட்டானி:

நள்ளிரவில் ஒரு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், அவரது தங்கையின் கை துண்டாகும் நிலையில் காயமடைந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் ஏழு நாட்கள் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிகளில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் உட்பட மூவரும் இளவயதினரானவர்கள். அவர்கள் இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் சுங்கை பெட்டானியில் உள்ள தாமான் கெம்பாஸ் பகுதியில் அதிகாலை நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என காவல்துறை நம்புகிறது.

சுமார் 20 வயதுகளில் உள்ள இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால், பலமுறை வெட்டப்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

மேலும் அவரது தங்கை கடுமையாக காயமடைந்து, தற்போது சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த இளைஞரின் உடல் மேலதிக விசாரணைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொலை குற்றச்சாட்டு, கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset