செய்திகள் இந்தியா
ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 37 இந்திய கப்பல்கள்
புது டெல்லி:
வளைகுடா போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா்.
இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணை வழியாக, சரக்குக் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக அந்த வழி மூடப்பட்டது. இதனால், அந்த வழியாகப் பயணிக்க வேண்டிய 37 இந்திய கொடி கொண்ட கப்பல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளன. அந்தக் கப்பல்களில் 1,109 மாலுமிகள் உள்ளனா். அவற்றில் சில கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்தன. பிற கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலியம் பொருள்களை ஏற்றிவரச் சென்றன.
கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் (டிஜிஎஸ்) சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சரக்குப் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுடன் அந்த இயக்குநரகம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது என்று தெரிவித்தன.
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாரசீக வளைகுடாவில் நிலவும் சூழல், அது இந்தியாவின் கடல்சாா் உடைமைகள் மற்றும் அலுவலா்கள் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து, தில்லியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பாரசீக வளைகுடா, ஹோா்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா மற்றும் அதையொட்டியுள்ள கடல் பகுதிகளில் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு கருதி டிஜிஎஸ் மூலம் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய மாலுமிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: பிடிஐ
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 12:27 am
ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மாநில அரசுகளுக்கு இந்திய அரசு உத்தரவு
February 26, 2026, 4:34 pm
இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்
February 26, 2026, 3:00 pm
அனில் அம்பானியின் நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி: ரூ.3,716 கோடி மதிப்பிலான பங்களாவை முடக்கியது அமலாக்கத்துறை
February 26, 2026, 1:40 pm
இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
February 26, 2026, 11:40 am
மண மேடையில் வைத்து மணப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய இளைஞர்
February 24, 2026, 3:02 pm
