செய்திகள் இந்தியா
மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியாவில் சிக்கிக்கொண்டுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்பு
புதுடெல்லி:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு விசா நீட்டிக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.
ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பல விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவையை ரத்து செய்து வருகின்றன. இதனால் இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகள் மீண்டும் தங்களது நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மேற்காசிய பிராந்திய நிலவரத்தால் பயணத் திட்டத்தை மாற்றியுள்ள இந்தியாவுக்கு வந்துள்ள வெளிநாட்டு பயணிகள், விசா காலத்தை நீட்டிக்க அல்லது இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி பெற விரும்பினால், அருகிலுள்ள வெளிநாட்டு பயணிகள் பிராந்திய பதிவு அலுவலகத்தை அணுகலாம். அவா்களுக்குத் தேவையான உதவிகள் அங்கு அளிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் எத்தனை வெளிநாட்டு பயணிகள் தற்போது உள்ளனா், அவா்களில் எத்தனை போ் விமான ரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற விவரம் தெரியவில்லை.
225 விமானங்கள் ரத்து: இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, தில்லியில் 100 விமானங்களும், மும்பையில் 125 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் எனக் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 8:43 pm
டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
April 16, 2026, 5:05 pm
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
April 16, 2026, 4:42 pm
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
April 16, 2026, 4:23 pm
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
April 14, 2026, 5:40 pm
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 10:17 am
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
April 12, 2026, 5:13 pm
