செய்திகள் இந்தியா
இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
டெல் அவிவ்:
இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதைப் பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக புதன்கிழமை சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார்.
இந்தச் சொற்பொழிவின் மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமா் என்ற பெருமையை மோடி பெற்றாா். அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மிக உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தலைவா் அமீா் ஒஹானா மோடிக்குப் பதக்கத்தை அணிவித்தாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி தெரிவித்திருப்பதாவது:
”நெசெட் (இஸ்ரேல் நாடாளுமன்றம்) பதக்கத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பதக்கத்தை பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த மரியாதை ஒரு தனிநபருக்கு அளிக்கப்படும் மரியாதை அல்ல, மாறாக இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நீடித்த நட்புக்கு அளிக்கப்படும் மரியாதை.
இது நமது இரு நாடுகளையும் வழிநடத்தும் பகிரப்பட்ட மரியாதையை பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
