செய்திகள் இந்தியா
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் புறப்பட்டார்: பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கிறார்
புதுடெல்லி:
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்கா-ஈரான் மோதல் போக்கால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போா்ச் சூழல் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தியப் பிரதமரின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தப் பயணத்தின்போது இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கும் பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்ற இருக்கிறாா்.
இந்த நிலையில், இஸ்ரேல் பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது:
”இன்றும் நாளையும் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன். நமது நாடுகள் வலுவான, பன்முகத்தன்மை கொண்ட ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டின் உறவுகள் கணிசமாக வலுப்பெற்றுள்ளன.
பிரதமர் நெதன்யாகுவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்போம். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் சந்திக்கவுள்ளேன்.
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் இன்று மாலை உரையாற்றவுள்ளேன். இது நம்மை இணைக்கும் வலுவான நாடாளுமன்ற, ஜனநாயக உறவுகளுக்கு ஒரு மரியாதை. இந்தியா - இஸ்ரேல் நட்பை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்யும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுடனும் நான் உரையாடவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின்போது, பிரதமா் மோடிக்கு நெதன்யாகு முறையில் இரவு உணவு விருந்து அளிக்க இருக்கிறாா்.
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் மோடி இஸ்ரேலுக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2017 ஜூலையில் அவா் இஸ்ரேல் சென்றாா்.
மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ந்து இஸ்ரேல் பலஸ்தீன மக்களை கொலை செய்துவரும் சூழலில் இந்தியப் பிரதமர் மோடி அங்கு செல்வது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
