செய்திகள் தொழில்நுட்பம்
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது உயர் தொழில்நுட்ப மேம்பாடுகள் இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதியை அரசு கட்டுப்படுத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தேசிய மின் விநியோக வலையமைப்பின் மீது அதிக சுமை ஏற்படுவதையும் வீட்டு பயன்பாட்டாளர்களுக்கு மின்தடை ஏற்படுவதையும் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
நாட்டில் செயல்படும் அனைத்து தரவு மையங்களின் காரணமாக மின்சாரம், நீரின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
“AI அல்லது உயர் தொழில்நுட்ப மேம்பாடுகள் இல்லாமல், குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தையும் நீரையும் பயன்படுத்துவதற்காக மட்டுமே விண்ணப்பிக்கப்படும் புதிய தரவு மையங்களின் அனுமதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
உயர் தொழில்நுட்பம், AI வளர்ச்சிக்கு பயன் தரும் தரவு மையங்களுக்கு எளிதாக அனுமதி வழங்கப்படும்,” என்று அவர் இன்று மக்கலவையில் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 23, 2026, 10:30 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகை இயக்கும் சக்தியாக மலேசியா: டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத்
February 22, 2026, 3:29 pm
சந்திரனுக்கு விண்வெளியை அனுப்பும் நாசாவின் திட்டம் தாமதமடையும்: ஜாரெட் ஐசக்மேன்
February 19, 2026, 10:06 am
தென் கொரியாவை குறிவைக்கும் வடகொரியா: ராக்கெட் ஆயுத மேம்பாட்டு திட்டம்
February 2, 2026, 4:31 pm
Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு
January 20, 2026, 12:06 pm
இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் கட்டுமானத் துறையினரின் பணிகளை எளிமையாக்கும்: சிவமணி
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து
October 29, 2025, 7:07 am
