நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2022 முதல் 2025 வரை 175 கைவிடப்பட்ட குழந்தைகள் மீட்பு: சமூக நலத்துறையின் அறிவிப்பு

கோலாலம்பூர்: 

2022 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், 175 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, சமூக நலத்துறையின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்ததாவது, குழந்தைகளை கைவிடுதல் அல்லது முறையான பராமரிப்பு வழங்கப்படாமை ஆகியவை 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 17(1)இன் கீழ் பாதுகாப்பு தேவைப்படும் நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

கைவிடப்பட்ட குழந்தைகளை மீட்டு பாதுகாப்பளிப்பது சமூக நலத்துறையின் பொறுப்பாகும். சம்பந்தப்பட்ட வழக்குகள் மலேசிய அரச காவல்துறையால் விசாரிக்கப்படுகின்றன.

இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த, சமூக சுகாதார கல்விக்கான தேசிய கொள்கையும் செயல்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது. 

இளைஞர்களுக்கான ஆலோசனை, சுகாதார சேவைகள் வழங்கும் 18 ‘இளைஞர் மையங்கள்’ நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக, வாகனங்களின் மூலம் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த முயற்சிகள் சமூகத்தில் இத்தகைய சம்பவங்கள் மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset