நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜனவரி முதல் பிப்ரவரி வரை 7,043 சட்டவிரோத குடியேறிகள் கைதாகி உள்ளனர்: மலேசிய குடிவரவு துறை

புத்ராஜெயா: 

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 19 வரை, மொத்தம் 7,043 சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவு துறை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 1,855 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 30,177 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.

குடிவரவு துறையின் துணை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் செல்லுபடியாகும் அனுமதி ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்ததாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியா, மியான்மர், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

குடிவரவு சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், சட்ட மீறல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அதிகாரிகளுக்கு வழங்குமாறும் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset