செய்திகள் மலேசியா
சட்டவிரோத பட்டாசு விற்பனைக்கு எதிராக சுங்கை பட்டானியில் காவல் துறையின் அதிரடி சோதனை
சுங்கை பெட்டானி:
உரிமம் காலாவதியான பின்னரும் பட்டாசுகளை விற்பனை செய்ததாக, கோலா முடா பகுதியில் நடத்தப்பட்ட காவல் துறை சோதனை நடவடிக்கையில் ஒரு வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கோலா முடா மாவட்ட காவல் துறை தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்ததாவது, சீனப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட பட்டாசு விற்பனை உரிமம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருந்தும் சில வியாபாரிகள் சட்டத்தை மீறி விற்பனையைத் தொடர்ந்ததாகக் கூறினார்.
நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற சோதனையில், தாமான் ரியா ஜெயா, தாமான் செங்கல் இந்தா பகுதிகளில் உள்ள இரண்டு கடைகள் சோதனையிடப்பட்டன. ஒரு இடத்தில் கடை மூடப்பட்டிருந்தாலும், உரிமம் இன்றி விற்பனைக்காக வைத்திருந்த பல்வேறு பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன.
மற்றொரு இடத்தில் இயங்கிக் கொண்டிருந்த கடையில் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு, 1957-ஆம் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 6:45 am
மொஹைதின் யாசினுக்குப் பதிலாக பெரிக்கத்தான் தலைவராக அஹ்மது சாம்சூரி மொக்தார் நியமனம்
February 23, 2026, 5:45 pm
2026 மலேசியா சுற்றுலா ஆண்டை தொடக்கிய 2 மாதத்தில் 9.4 மில்லியன் பயணிகள்
February 23, 2026, 5:43 pm
மலேசிய ஒளிபரப்பு துறையின் புதிய தலைமை இயக்குநராக அஷ்வாட் இஸ்மாயில் நியமனம்
February 23, 2026, 5:42 pm
முதலீட்டு மோசடியில் சிக்கி RM6.6 லட்சத்திற்கும் மேல் இழந்த அமெரிக்க குடிமகன்
February 23, 2026, 5:40 pm
நாட்டில் பொருளாதார முதலீடும் வேலைவாய்ப்பும் உயர்கிறது: பிரதமர் அன்வார்
February 23, 2026, 4:41 pm
“சுங்கை காபுலில் துர்நாற்ற மாசுபாடு குறித்த விசாரணை: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் நடவடிக்கை
February 23, 2026, 4:09 pm
பத்து மாவுங் கரோக்கே மையத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை: 36 பேர் கைது
February 23, 2026, 4:06 pm
மைஜாலான் செயலி வழியே 54 ஆயிரத்துக்கும் மேல் சாலை சேதப் புகார்கள்: அமைச்சர் அஹ்மது மஸ்லான்
February 23, 2026, 4:05 pm
