நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதின் யாசினுக்குப் பதிலாக பெரிக்கத்தான் தலைவராக அஹ்மது சாம்சூரி மொக்தார் நியமனம்

கோலாலம்பூர்:

எதிர்த்தரப்புக் கூட்டணியான பெரிக்கத்தான் நேசனல் (Perikatan Nasional), தனது புதிய தலைவரை அறிவித்துள்ளது.

பாஸ் (PAS) கட்சியின் துணைத் தலைவர் அஹ்மது சாம்சூரி மொக்தார் (Ahmad Samsuri Mokhtar) தலைவராக நியமிக்கப்பட்டார்.

நேற்று, பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட உச்சமன்றக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் முஹைதின் யாசினின் இடத்துக்குத் திரு அஹ்மது சாம்சூரி வருகிறார்.

2020ஆம் ஆண்டிலிருந்து  முஹைதின் யாசின் கூட்டணிக்குத் தலைமை வகித்தார். டிசம்பர் மாதம் விலகுவதாய் அறிவித்தார்.

திரெங்கானு (Terengganu) மாநிலத்தின் முதலமைச்சரான  அஹ்மது சாம்சூரி புதிய தலைவராகிறார்.

தற்போது பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியில் பாஸ் (PAS), பெர்சத்து (Bersatu), கெராக்கான் (Gerakan), MIPP ஆகிய கட்சிகள் உள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset