நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“சுங்கை காபுலில் துர்நாற்ற மாசுபாடு குறித்த விசாரணை: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் நடவடிக்கை

ஷா ஆலம்: 

செமென்யி பகுதியில் உள்ள சுங்கை காபுல் ஆற்றில் ஏற்பட்ட துர்நாற்ற மாசுபாடு தொடர்பான விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில் இருப்பதாக, சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. 

மலேசிய இரசாயனத் துறையிலிருந்து மாதிரி ஆய்வு முடிவுகள் கிடைத்தவுடன், அந்த அறிக்கை துணை அரசுத் தரப்பினரிடம் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படும்.

இவ்வழக்கில், எண்ணெய் மறுசுழற்சி, பிளாஸ்டிக் கழிவு செயல்பாடுகளில் ஈடுபட்ட இரண்டு தொழில் நிறுவனங்கள் சந்தேகத்தின் கீழ் உள்ளன. மாசுபாடு ஏற்பட்ட பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், ஆற்றில் தீவிர கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மகோத்தா பெரனாங் தொழில்துறை பகுதியில் உள்ள அந்த நிறுவனங்கள், கருப்பு நிற கழிவுநீரையும், எண்ணெய் கழிவுகளையும் வடிகால் வழியாக ஆற்றில் வெளியிட்டதாக தகவல்கள் வெளியானது. 

இதையடுத்து, சிலாங்கூர் முதலமைச்சர் அமிருதின் ஷாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக இரண்டு விசாரணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset