நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து மாவுங் கரோக்கே மையத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை: 36 பேர் கைது

பாலிக் புலாவ்: 

பத்து மாவுங் பகுதியில் உள்ள ஒரு கரோக்கே பொழுதுபோக்கு மையத்தில் நடத்தப்பட்ட காவல் துறை சோதனை நடவடிக்கையில் 36 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த 36 பேரும் மூன்று நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 34 ஆண்கள், பெண்கள், மேலும் இரண்டு உள்ளூர் குடிமக்கள் அடங்குகின்றனர். 22 முதல் 40 வயதுக்குட்பட்ட இவர்களை, குடியேற்றச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்காக, பிப்ரவரி 25 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இரு மாடிகள் கொண்ட கடை வளாகத்தில் இயங்கி வந்த அந்த பொழுதுபோக்கு மையம், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சோதனையிடப்பட்டது. 

ஆரம்பகட்ட விசாரணையில், வெளிநாட்டு வாடிக்கையாளர்களை குறிவைத்து இயங்கிய அந்த மையத்தில் பணியாற்றியவர்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்களும், வேலை அனுமதியும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset