நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் பொருளாதார முதலீடும் வேலைவாய்ப்பும் உயர்கிறது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

வடக்கு பொருளாதார வழித்தடப் பகுதி வளர்ச்சி திட்டத்தின் (NCER) மூலம், 2025-ஆம் ஆண்டில் 78.95 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடு நிறைவேற்றப்பட்டதுடன், 23,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

35-ஆவது வடக்கு வழித்தட அமலாக்க ஆணையக் கூட்டத்தில் இந்த முன்னேற்றம் அறியப்படுத்தப்பட்டதாகவும், கடந்த ஆண்டு தொழில்நுட்ப புதுமை மையத்தின் மூலம் 4,000 உள்ளூர் திறமைகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், மலேசியா–தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் முதலீட்டு சூழலை வலுப்படுத்துவதும், லங்காவி தீவின் சுற்றுலா போட்டித்திறனை மீண்டும் உயர்த்தும் முயற்சிகளும் ஆய்வு செய்யப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset