நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு மருத்துவமனைகளின் தயார்நிலை, தலசீமியா நோய் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்

கோலாலம்பூர்: 

அரசு மருத்துவமனைகளில் தொற்றாத நோய்களின் அதிகரிப்பை எதிர்கொள்ளும் தயார்நிலை, தலசீமியா நோயைச் சார்ந்த பிரச்சினைகள் இன்று இங்கு நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

சோங் ஜெமின் (PH-கம்பார்) சுகாதார அமைச்சரிடம், நீரிழிவு, இருதய நோய் போன்ற தொற்றாத நோய்களின் அதிகரிப்பை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகள் தயாரிப்பு நிலைகள், ஆரம்பகட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு குறித்து விளக்கமளிக்குமாறும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, டத்தோ டாக்டர் அஹ்மத் யூனுஸ் ஹைரி (PN-குவாலா லங்காட்), நாட்டில் தற்போது உள்ள தலசீமியா நோயாளிகளின் எண்ணிக்கை, ஒரு நோயாளியைக்  குழந்தைப் பருவத்திலிருந்து 40 வயது வரை சிகிச்சை செய்ய வேண்டிய செலவு எவ்வளவு என்பதையும், மேலும் ஜீன் தெரபி (Gene Therapy) சிகிச்சை முறையை அரசு உருவாக்குமா என்பது பற்றியும் கேள்வி எழுப்பினார்.

மேலும், டத்தோ டாக்டர் ரிச்சர்ட் ராப்பு (GPS-பெடோங்), முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு சேவைகளில் அணுகல், தரம், பணியாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை 2026–2030 மலேசிய Care Economy கட்டமைப்பு, செயல் திட்டம் எவ்வாறு கையாளும் என்பதை விளக்குமாறு, பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சரிடம் கேட்டார். அதோடு, அதற்கான இலக்குகள், நிதி ஒதுக்கீடு, செயல்திறன் குறியீடுகள் குறித்தும் அவர் விளக்கம் கோரினார்.

கேள்வி–பதில் அமர்வுக்குப் பிறகு, பிரதமர் துறை அமைச்சர் (சட்டம், நிறுவன மறுசீரமைப்பு) அரசமைப்பு (திருத்தம்) (எண்.1), (எண்.2) 2026 மசோதாக்களை முதல் வாசிப்புக்காக முன்வைக்க உள்ளார். அதே நேரத்தில், நிதியமைச்சர் கூடுதல் வழங்கல் மசோதா (2025) 2026-ஐ முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்க உள்ளார்.

இதில் மேலும், நபர் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கும் மசோதா 2026 இரண்டாம் வாசிப்புக்காகவும், தேசிய கணக்காய்வாளர் அறிக்கை (LKAN) 1/2026 குறித்து விவாதிக்க பிரதமர் துறை அமைச்சர் முன்மொழிவு கொண்டுவர உள்ளார்.
– பெர்னாமா

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset