செய்திகள் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகை இயக்கும் சக்தியாக மலேசியா: டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத்
கோலாலம்பூர்:
உலகளாவிய தொழில்நுட்ப விநியோகப் பிணைப்பில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, தொலைபேசி சாதனங்களுக்கான சிப் தயாரிப்பில் மலேசியா முக்கிய பங்காற்றி வருகிறது.
மலேசிய உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் தயாரிப்புகள் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் அதிநவீன சாதனங்களின் முக்கிய கூறுகளாகும் என மலேசிய மத்திய வங்கி ஆளுநர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத் கஃபார் தெரிவித்தார்.
“அவர் மேலும் கூறுகையில், மலேசியா ஒரு சிறிய நாடாக இருந்தாலும், உயர் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பிற்கு அதன் பங்களிப்பு மிகப்பெரியது. இது எதிர்கால தொழில்நுட்ப உற்பத்தியில் நாட்டின் தொழில் எவ்வளவு ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது” என்று கூறினார்.
மேலும், பல கூறுகளை ஒரே சிப்பாக இணைக்கும் தொகுப்பு தொழில்நுட்பம் மலேசியாவில் நேரடியாக மேற்கொள்ளப்படுவதால், உயர்தர வெளிநாட்டு முதலீடுகளும், உயர் தொழில்நுட்பத் திறன்கள் தேவைப்படும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
நினைவகச் சிப்புகள் உற்பத்தியிலும், தரவுகளை செயலாக்கும் தர்க்கச் சிப்புகள் உற்பத்தியிலும் மலேசியா முக்கிய மையமாக விளங்குகிறது. இந்த முன்னேற்றம், முதலீட்டு சீர்திருத்தங்களின் வெற்றியையும், நாட்டின் மனித வளத் திறன் உலகத் தரத்திற்கு இணையானதையும் வெளிப்படுத்துகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 12:48 pm
சிப் வடிவமைப்புத் துறையில் சாதனை: ‘Arm’ நிறுவனத்துடன் கைகோர்க்கும் மலேசியா
March 13, 2026, 12:45 pm
பசுமை தொழில்நுட்பத்தில் ஜொகூர் முன்னிலை: ‘ZData’ மையத்திற்கு சான்றிதழ் வழங்கல்
March 11, 2026, 12:12 pm
வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது
February 24, 2026, 12:08 pm
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
February 22, 2026, 3:29 pm
சந்திரனுக்கு விண்வெளியை அனுப்பும் நாசாவின் திட்டம் தாமதமடையும்: ஜாரெட் ஐசக்மேன்
February 19, 2026, 10:06 am
தென் கொரியாவை குறிவைக்கும் வடகொரியா: ராக்கெட் ஆயுத மேம்பாட்டு திட்டம்
February 2, 2026, 4:31 pm
Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு
January 20, 2026, 12:06 pm
