நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பிப்ரவரி 19 வியாழன் அன்று நோன்பு நோற்கத் தொடங்குவார்கள்.

இதனை அரசு முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சையத் டேனியல் சையத் அஹ்மத்,  சிறிது நேரத்திற்கு முன்பு அறிவித்தார்.

முன்னதாக, பைத்துல் ஹிலால் பங்குனான் சுல்தான் இஸ்மாயில், பொன்டியன், ஜொகூர் உட்பட நாடு முழுவதும் இன்று 29 இடங்களில் நிலவை பார்க்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. 

கோம்ப்ளெக்ஸ் ஃபலாக் அல்-கவாரிஸ்மி, தஞ்சோங் பிடாரா, மலக்கா, பைத்துல் ஹிலால் டெலோக் கெமாங், போர்ட் டிக்சன் ஆகிய இடங்களிலும்

சிலாங்கூர், பேராக், புலாவ் பினாங், கெடா, திரெங்கானு, கிளந்தான், பகாங், சரவாக், சபாவிலும் மெனாரா கோலாலம்பூர், புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையம் உள்ளிட்ட பல இடங்களிலும் பிறை பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனவே நாளை 18 ஆம் தேதி இரவு மலேசியா முழுவதும் ரமலான் மாத தராவீஹ் தொழப்படும்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset