செய்திகள் மலேசியா
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
பாகான் செராய்:
பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து பலரும் திரும்புவதனால், நாளை முதல் முக்கிய விரைவு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு ஆணையத் துறை இயக்குனர் முஹம்மது ஹஸ்புல்லா அலி தெரிவித்ததாவது,
வடக்கு, தெற்கு பகுதிகளிலிருந்து தலைநகரை நோக்கி வாகன இயக்கம் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க, ஒப் செலாமட் நடவடிக்கையின் கீழ் 10,000 போலீஸ் அதிகாரிகள், சாலைப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியமர்த்தப்படுகின்றனர்.
காலை முதல் இரவு வரை போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் முன்திட்டமிட்டு பயணிக்கவும், நெரிசல் நேரங்களை தவிர்க்கவும், பணியில் உள்ள அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விபத்து அல்லது வாகனக் கோளாறு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
தற்போதைய போக்குவரத்து நிலவரத்தை அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களிலும், நெடுஞ்சாலை நிர்வாகங்களின் தகவல்கள் ஊடகங்களில் தெரிந்து கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
