செய்திகள் மலேசியா
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
பாகான் செராய்:
பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து பலரும் திரும்புவதனால், நாளை முதல் முக்கிய விரைவு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு ஆணையத் துறை இயக்குனர் முஹம்மது ஹஸ்புல்லா அலி தெரிவித்ததாவது,
வடக்கு, தெற்கு பகுதிகளிலிருந்து தலைநகரை நோக்கி வாகன இயக்கம் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க, ஒப் செலாமட் நடவடிக்கையின் கீழ் 10,000 போலீஸ் அதிகாரிகள், சாலைப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியமர்த்தப்படுகின்றனர்.
காலை முதல் இரவு வரை போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் முன்திட்டமிட்டு பயணிக்கவும், நெரிசல் நேரங்களை தவிர்க்கவும், பணியில் உள்ள அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விபத்து அல்லது வாகனக் கோளாறு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
தற்போதைய போக்குவரத்து நிலவரத்தை அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களிலும், நெடுஞ்சாலை நிர்வாகங்களின் தகவல்கள் ஊடகங்களில் தெரிந்து கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 12:53 pm
எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்
April 15, 2026, 12:48 pm
மலேசியாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
April 15, 2026, 12:38 pm
மர்மமான தலைவலியால் வாடும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அவலம்
April 15, 2026, 12:28 pm
ஒரே கல்லில் மூன்று மாங்காய்: மோசடி கும்பலிடம் சிக்கி 53,000 ரிங்கிட்டை இழந்த அரசு ஊழியர்
April 15, 2026, 11:32 am
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் செய்ய பேராக் அரசு தயார்
April 15, 2026, 11:11 am
பிரதமருக்குப் பெருநாள் பரிசு: விமானப் படிக்கட்டில் இருந்து ஓடி வந்த பிரதமர்
April 15, 2026, 10:40 am
நிலையம் மூடப்படவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்: கே.பி.டி .என்
April 15, 2026, 10:32 am
அந்தமான் கடலில் பயங்கரம்: 250-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
April 15, 2026, 10:08 am
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் அதிரடி திட்டம்: 2 லட்சம் நெல் விவசாயிகள் பயன்பெறுவர்
April 15, 2026, 9:52 am
