செய்திகள் மலேசியா
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
கூச்சிங்:
சரவாக் மாநிலத்தின் சமராஹான் பிரிவில் உள்ள சடோங் ஜெயா பகுதியில், சுங்கைப் பூலோ பாலத்தின் கீழ் மீன் வலையிடும் போது ஒருவர் முதலை தாக்கியதில் காணாமல் போனார்.
பாதிக்கப்பட்டவர் முகமது பைசல் அப்திலா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நண்பருடன் ஆற்றங்கரையில் மதியம் 12.30 மணியளவில் மீன் வலையிட்டுக் கொண்டிருந்த அவர், இடுப்பளவு நீரில் இறங்கிய தருணத்தில் திடீரென முதலை தாக்கியதாக சாட்சிகள் தெரிவித்தனர்.
நிகழ்வுக்குப் பின் உடனடியாக பொதுமக்களின் உதவியை நாடிய நண்பர், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவசர அழைப்பு 12.40 மணிக்கு கிடைத்ததையடுத்து, மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை, சரவாக் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளை தொடங்கியது.
ஆற்றின் நீரோட்டத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மேற்பரப்பு தேடல் முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
