செய்திகள் மலேசியா
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
கூச்சிங்:
சரவாக் மாநிலத்தின் சமராஹான் பிரிவில் உள்ள சடோங் ஜெயா பகுதியில், சுங்கைப் பூலோ பாலத்தின் கீழ் மீன் வலையிடும் போது ஒருவர் முதலை தாக்கியதில் காணாமல் போனார்.
பாதிக்கப்பட்டவர் முகமது பைசல் அப்திலா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நண்பருடன் ஆற்றங்கரையில் மதியம் 12.30 மணியளவில் மீன் வலையிட்டுக் கொண்டிருந்த அவர், இடுப்பளவு நீரில் இறங்கிய தருணத்தில் திடீரென முதலை தாக்கியதாக சாட்சிகள் தெரிவித்தனர்.
நிகழ்வுக்குப் பின் உடனடியாக பொதுமக்களின் உதவியை நாடிய நண்பர், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவசர அழைப்பு 12.40 மணிக்கு கிடைத்ததையடுத்து, மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை, சரவாக் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளை தொடங்கியது.
ஆற்றின் நீரோட்டத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மேற்பரப்பு தேடல் முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
