நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தண்ணீர் தொட்டியில் நாயை அமிழ்த்தி வைரலான ஆடவர் கைது

ஷாஆலம்:

ஷா ஆலம், செக்சன் 32இல் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில், நாயை தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தி துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை நேற்று போலிஸ் கைது செய்தது.

டிக் டாக்கில் அந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்களில் ஒருவரிடமிருந்து அதிகாலை 2.14 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து போலிசாருக்கு புகார்  கிடைத்ததாக ஷா ஆலம் போலிஸ் தலைவர் ராம்சே எம்போல் கூறினார்.

அந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு நாய்க்குட்டியை தண்ணீர் தொட்டியில் வன்முறையாக அமிழ்த்துவது தெரிகிறது.

தகவலின் பேரில்,  பிற்பகல் சுமார் 3.40 மணியளவில், சம்பவம் நடந்த பகுதியில் 20 வயதுகளில் உள்ள உள்ளூர்வாசி என சந்தேகிக்கப்படும் ஒருவரை போலிஸ் கைது செய்தது.

கைது நடவடிக்கையின் போது, ​​மேலதிக நடவடிக்கைக்காக சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறையின் உதவியுடன் சந்தேக நபருடன் மூன்று நாய்களும் கைப்பற்றப்பட்டன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset