நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கப்பட்டார்

ரொம்பின்:

பகா பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து தனது நீக்கம் செய்யப்பட்டதை ரோம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காலிப் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.

பெர்சத்து தலைவர் அலுவலகத்திலிருந்து ஏப்ரல் 7ஆம் தேதி பணிநீக்கக் கடிதம் கிடைத்ததாக அவர் கூறினார்.

ஆம்... அது சரிதான்... பகாங் பெர்சத்து மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்குவது குறித்த கடிதத்தை  பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ  மொஹைதினிடம் இருந்து நான் பெற்றேன்.

உண்மையில், நான் பெற்ற கடிதத்தின்படி, எனது பதவி நீக்கம் 2026 மார்ச் 10 முதல் அமலுக்கு வருகிறது என்று அவர் நேற்று இரவு தெரிவித்தார்.

முன்னதாக, கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுதீனை ஆதரிப்பதாகக் கூறப்பட்ட 18 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலிலும் அப்துல் காலிப்பின் பெயர் இடம்பெற்றிருந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset