நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் அடையும்: டத்தோஸ்ரீ சரவணன்

சென்னை:

மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் மிகப் பெரிய உச்சத்தை  அடையும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

இன்று சென்னையில் நம்பிக்கை இணையத்தள ஊடகத்தின் அனைத்துலக துவக்க விழாவில், சிறப்புரையாற்றி கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
மலேசியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் நம்பிக்கை, தற்போது தனது சிறகுகளை துபாய், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

உலக அரங்கில் புதிய சாதனைகள் படைக்கப் பயணிக்கும் நம்பிக்கை குழுவினருக்கு எனது மனமார்ந்த  நல்வாழ்த்துகள்.

மலேசியாவில் நம்பிக்கை மரியாதைக்குரிய ஊடகமாக விளங்குகிறது.

இந்த ஊடகத்தையும் நடத்துபவர்களும் மரியாதைக்குரியவர்கள்.

இந்நிலையில் சரியான நேரத்தில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சிறகை விரித்துள்ளது.

அவ்வகையில் நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் தொடும் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset