நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெஸ்டிநெட் உருவாக்கிய அந்நியத் தொழிலாளார் ஆட்சேர்ப்பு முறையைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை: டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

பெஸ்டிநெட் உருவாக்கிய புதிய அந்நியத் தொழிலாளார்  ஆட்சேர்ப்பு முறையைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டதில், மனிதவள அமைச்சுக்கு எந்தப் பிரச்சினையையும் இல்லை.

மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

மனிதவள அமைச்சு தற்போது இந்த முறையைச் செயல்படுத்தும் வழிமுறை குறித்து விவாதித்து வருகிறது. பின்னர் அமைச்சரவையில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

இப்போதைக்கு, இந்த முறையை உருவாக்கியவராக பெஸ்டிநெட்டைப் பயன்படுத்துவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த முறை, பெரும்பாலும் அதிக கட்டணம் வசூலிக்கும் இடைத்தரகர்கள் வழியாகச் செல்லாமல், நிறுவனங்கள் நேரடியாகப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் ஒரு தீர்வாக விளம்பரப்படுத்தப்படுகிறது.

உலகளாவிய ஆட்சேர்ப்பு மேம்பட்ட தளம் என அறியப்படும் இந்த அமைப்பு, வேலையளிப்பவர்கள் தொழிலாளர்களைப் பதிவு செய்யவும் தேடவும் அனுமதிக்கும் ஒரு இலக்கவியல் தளத்தை  கொண்டிருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset