நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் ஆண்டில் 6.65 பில்லியன் ரிங்கிட்டை சொக்சோ இழப்பீடுகளாக வழங்கியுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

கடந்த 2025ஆம் ஆண்டில் 6.65 பில்லியன் ரிங்கிட்டை சொக்சோ இழப்பீடுகளாக வழங்கியுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

சமூகப் பாதுகாப்பு அமைப்பான சொக்டோ நாடு முழுவதும் 1.15 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்களுக்கு மொத்தம் 6.65 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பீடுகளை விநியோகித்துள்ளது.

இது 2025ஆண்டு செயல்திறன் அறிக்கையின் தரவுகள், நிறுவனத்தின் மேலாண்மை, நிர்வாகத்தின் செயல்திறனை நிரூபிக்கின்றன.

மேலும் இந்தத் தொகை 2024ஆம் ஆண்டில் 6.1 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது 8.34 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது சொக்சோவின் உயர் நிர்வாகத்தின் தலைமையின் உந்துதலால் இலக்குக் குழுவிற்கு நன்மைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது.

சுங்கைபூலோ மக்கள் சேவை மையத்தில் கெசுமா சொக்சோ லிண்டுங் 2026 சீனப் புத்தாண்டு கொண்டாட்ட விழாவை தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய ஒரு வளர்ச்சியில், 24 மணி நேர லிண்டுங் முயற்சி, கிக் தொழிலாளர்கள் சட்டம் 2025 அமலாக்கம், லிண்டுங் கெண்டூரி பங்களிப்பாளர்களுக்கான பயணி திட்டம் உள்ளிட்ட மூன்று கொள்கை சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு சொக்சோ மூலம் செயல்படுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்தார்.

குறிப்பாக கையடக்க பாதுகாப்பு என்ற கருத்தின் மூலம் முறையான, முறைசாரா துறைகளுக்கு இடையிலான பாதுகாப்பு இடைவெளியை மூடுவதற்கான மனிதவள அமைச்சின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset