நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பெர்மிம் அமைச்சுகளுடன் இணைந்து செயல்படும்: அஸ்மான்

கோலாலம்பூர்:

இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பெர்மிம் பேரவை அமைச்சுகளுடன் இணைந்து செயல்படும்.

பெர்மிம் பேரவையின் தேசிய  தலைவர் முகமது அஸ்மான் ஷா கூறினார்.

பெர்மிம் செயற் குழுவினர் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோ சு புய்யுடன்  சிறப்பு சந்திப்பை நடத்தினர்.
இந்த சந்திப்பில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் குறிப்பாக கூட்டரசுப் பிரதேசத்தில் வாழும்  மக்களின் பிரச்சினைகள் குறித்து  விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் துணைத் தலைவர் ஹாஜி முகமது சுல்தான், உதவித் தலைவர்கள் கலீலுர்ஜாமான், அப்துல் மாலிக்,  ஜரீனா பேகம், பொதுச் செயலாளர் ஆதாம் மாலிக் ஆகியோர் உடனிருந்தனர்.

பெர்மிம், கூட்டரசுப் பிரதேச அமைச்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக மிகவும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன் நோக்கம் இந்திய முஸ்லிம் சமூகத்தின் நல உதவி மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டை மேம்படுத்துவதாகும்.

மேலும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழுவிற்கு இது ஒரு சிறந்த தொடக்கமாகும்.

இதனை தொடந்து வரும் காலங்களில் மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset