நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி சோதனை: சட்டவிரோத இறக்குமதி பொருள்கள் பறிமுதல்

கிள்ளான்:

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகள், கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, மீன், விலங்கு, வேளாண் தயாரிப்புகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்றதை முறியடித்துள்ளனர். 

இந்த நடவடிக்கையில், சுமார் RM1.03 மில்லியன் மதிப்புள்ள உறைந்த பன்றி இறைச்சி, விலங்கு பொருட்கள் அடங்கிய கொள்கலன் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. 

இவை அனைத்தும் மலேசிய தனிமைப்பத்தும், ஆய்வு சேவைத் துறையின் அனுமதி இன்றி நாட்டுக்குள் கொண்டு வர முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் உணவு பாதுகாப்பு, ஆரோக்கியம், வேளாண் துறையை பாதுகாக்கும் நோக்கில், இத்தகைய சட்டவிரோத இறக்குமதி நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான கண்காணிப்பும், அமலாக்க நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்  மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அறிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset