நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரிடம் மகஜர் வழங்கப்பட்டது

தம்பூன்:

அரசு, தனியார் நிலங்களில் உள்ள இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கலுக்கு தீர்வுக்கான பேரா இந்து சங்கம் சார்பில் ஆலய நில நடவடிக்கைக் குழு மனுவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர்.

தஞ்சோங் ரம்புத்தான் மைதானத்தில் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்பாட்டில்  நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் தம்புன் நாடாளுமன்றத் தொகுதிற்கான சிறப்பு அதிகாரி டத்தோ ஆர்.சுரேஷ்குமாரிடன் அந்த மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவை  பொங்கல் நிகழ்வில் கலந்துக்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் கவனத்திற்கு  டத்தோ சுரேஷ்குமார் கொண்டுச் சென்றார்.

தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் அரசாங்க நிலங்களில் பல ஆண்டுகள் செயல்பட்டு வரும் ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான  விண்ணப்பங்கள் செய்தும் நில அலுவலகத்தில் இருந்து முறையான பதில் கிடைப்பதில்லை என்ற பல புகார்களை ஆலய பொறுப்பாளர்கள்  முன் வைத்துள்ளனர்.

ஆலயங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்திற்கு்கொண்டுச் தம்மிடம் வழங்கிய   மனுவை பிரதமரிடம் கவனத்திற்கு கொண்டுச் சென்றதாக டத்தோ சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரத்திற்கு தீர்வுக்கான விரைவில் தீர்வுகான உரிய நடவடிகை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை ஆலய பொறுப்பாளர்கள்  கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் முன்னதாக பேசிய பிரதமர் இந்த நாட்டில உள்ள மக்களின் தேவைகளுகு குறிப்பாக வறுமை நிலை மக்களின் நலன் காக்க முன்னுரிமை அளிக்கபட்டும், எந்த  இனமும் புறக்கணிக்கப்படாது  என்ற உறுதி அளித்தார்.

இந்த  நிகழ்வில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு  மற்றும் இதர மாணவர்களுக்கு 30 மடிக்  கணினிகளை வழங்கப்பட்டது்

முன்னதாக நடைபெற்றநிகழ்வில் 50 மகளிர்கள் பொங்கல் வைத்தனர், சிறுவர்களுக்கு வர்ணம் தீட்டும் , உரியடித்தல் போட்டியும் இடம் பெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset