நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2,500 பேருக்கு ரமலான் உதவிகள்; அல் மதரஸதுல் ஃபரீதிய்யா வழங்கும்: டத்தோ ஜவஹர் அலி

கோலாலம்பூர்:

அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவின்  சமூக கடப்பாட்டின் அடிப்படையில் 2,500 பேருக்கு ரமலான் உதவிகள் வழங்கப்படும்.

அதன் நிறுவனர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தய்யூப்கான் இதனை கூறினார்.

ஸ்தாப்பாக்கில் செயல்பட்டு வரும் அல் மதரஸதுல் ஃபரீதிய்யா வசதிக் குறைந்த மக்களுக்கு நோன்புப் பெருநாள் உதவிப் பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

1995ஆம் ஆண்டு முதல் பெருநாளை முன்னிட்டு உதவிப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு ஆக அதிகமாக 2,500 பேருக்கு இந்தப் பெருநாள் உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு அதே எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்படும்.

அதே நேரத்தில் இன்னும் அதிகமாக வந்தால் அம்மக்களுக்கும் உதவிகள் வழங்க நாங்கள் முயற்சிகளை மேற்கோள்வோம்.

அவ்வகையில் இன்று அவ்வுதவிகளுக்கான பதிவு நடைபெற்றது.

வரும் மார்ச் 1ஆம் தேதி இம் மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்.

முஸ்லிம்களை தவிர்த்து அனைத்து இன மக்களுக்கும் இந்த உதவிகள் வழங்கப்படுகிறது என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset